பாலியல் புகாரில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்.! 

பாலியல் புகாரில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்.! 

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து தற்போது மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் சமூக வலைதளத்தில் அப்பள்ளியின் ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பள்ளியில் ஆசிரியரான ஆனந்தனை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் எடுத்துவரும் ஆசிரியர் ஆனந்தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இதன் காரணமாக பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர், மேலும் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கைது செய்யவேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.