எங்களிடம் தோற்றவர்கள் எங்களை வாழ்த்தவா செய்வார்கள்.? -பாஜகவை கலாய்த்த அமைச்சர் கே.என்.நேரு.! 

எங்களிடம் தோற்றவர்கள் எங்களை வாழ்த்தவா செய்வார்கள்.? -பாஜகவை கலாய்த்த அமைச்சர் கே.என்.நேரு.! 

 திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினார்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கூட இன்னும் ஓரிரு தினங்களில் மக்களை அழைத்து மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். அவை இன்னும் ஓரிரு தினங்களில் வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.


 அதைத் தொடர்ந்து பாஜகவின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
 எங்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்கள். ஆட்சிக்கு அவர்களால் வர முடியவில்லை. அப்புறம் அவர்கள் எங்களை வாழ்க என்றா சொல்வார்கள். அவர்களின் விமர்சனங்களுக்கும் எல்லாம் பதில் சொல்லாமல் செயலில் காட்டுவோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவோம் எனக் கூறினார்.