இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடலாம்…
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று துவங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற உள்ள இந்த இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
அங்கு சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தனியார் வசம் மீதமுள்ள தடுப்பூசிகளையும் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக விரைந்து தடுப்பூசி செலுத்திட இந்தத் திட்டம் பயன் பெறும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.