தமிழ்நாட்டில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

 தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.