ஓ.பி.எஸ் திமுக அரசை தூண்டி விடுகிறார் : சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ் திமுக அரசை தூண்டி விடுகிறார் : சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ். தூண்டுதலின் பேரில், எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம், திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

மேலும், திமுகவோடு உறவாடி, அதிமுகவிற்கு துரோகம் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டுதலின் பேரில், எஸ்.பி. வேலுமணி நடத்தி வரும் இலவச ஐ.ஏ.எஸ்.அகாடமியில், சோதனை நடத்த வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பொய் வழங்கு போட்டு, அவருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது.

திமுகவுடன் உறவாடும் ஒரு நபர் என வெளிப்படையாக ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு தெரிவித்ததோடு, காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் திமுக வின் தொண்டர் படையாக செயல்பட்டு வருகிறது என சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

அதேபோன்று, அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி ஜுலை 11 அன்று எழுச்சியுடன் நடைபெறும் என சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.