தமிழர்களை வஞ்சிக்கும் கேரள அரசு… பாரபட்சம் காட்டுவதாக தமிழக தொழிலாளர்கள் வேதனை!  

கொரோனா தடுப்பூசி போடாத பிற மாநிலத்தவர்களை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழர்களை வஞ்சிக்கும் கேரள அரசு… பாரபட்சம் காட்டுவதாக தமிழக தொழிலாளர்கள் வேதனை!   

கொரோனா தடுப்பூசி போடாத பிற மாநிலத்தவர்களை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடாத குஜராத், மத்தியப்பிரதேச தொழிலாளர்களை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிப்பதாக புகார் எழுந்தது. தங்களை மட்டும் கேரளாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பதாக தமிழக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குஜராத், மத்தியப்பிரதேச தொழிலாளர்கள் நிபந்தனை இன்றி கேரளா செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடியில் இருந்து கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 2 நாட்களாக திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று கூறி தமிழக தொழிலாளர்களை கேரள போலீஸ் திருப்பி அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.