பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது....! தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு தரிசனம் ...!

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது....! தமிழ்ப்புத்தாண்டு  சிறப்பு தரிசனம் ...!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவிலில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பண்ணாரி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று,  பண்ணாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. கோவிலின் முன்பு இருந்த குண்டத்திற்கு  பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தியும், கற்பூரம் ஏற்றியும், பெண்கள் நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதையும் படிக்க;.....அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்கக் கூடாது.. !

மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து  நின்று பண்ணாரி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்ததால், அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 இதையும் படிக்க:....ஐபோனை தொலைத்த நடிகை ஷாலு ஷம்மு... காவல்நிலையத்தில் புகார்!!