ஆக்கிரமிக்கப்பட்ட குளம்...மீட்டுத் தர மக்கள் கோரிக்கை!

ஆக்கிரமிக்கப்பட்ட குளம்...மீட்டுத் தர மக்கள் கோரிக்கை!

திண்டுக்கல் அருகே, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை மீட்டு தரக்கோரி, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளம் ஆக்கிரமிப்பு

பெருமாள் கோயில் பட்டியில் உள்ள மீரா ராவுத்தர் குளத்தை, கடந்த 3 தலைமுறைக்கும் மேலாக, ஊர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 4 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தில், பருவமழை காலங்களில் பொதுமக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, தண்ணீர் வற்றும் போது மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.

ஊர் மக்கள் கோரிக்கை

இந்நிலையில் இந்தாண்டு மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில்  தற்போது  இந்த  குளத்தை குத்தகை எடுத்ததாக கூறி தனி நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக குளத்தில் டென்ட் அமைத்து தங்கி வருகிறார் . இது எங்கள் கிராமமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.