பி.எஸ்.பி.பி பள்ளி குறித்த கேள்வி.! அலட்சியப்படுத்திய எடப்பாடி, ஆவேசமடைந்த வளர்மதி.! 

பி.எஸ்.பி.பி பள்ளி குறித்த கேள்வி.! அலட்சியப்படுத்திய எடப்பாடி, ஆவேசமடைந்த வளர்மதி.! 

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விருகை ரவி,சத்யா,ராஜேஷ்,ஆதி ராஜாராம், வளர்மதி,உள்ளிட்டோரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் வந்தனர். 

 அதைத் தொடர்ந்து  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கடைசி வரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அதிமுக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டம் முடிந்ததும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக மூத்த தலைவர் வளர்மதி அருகில் இருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு எல்லாம் பதிலளித்தார் அப்போது பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றார். அப்போது அருகிலிருந்த வளர்மதி இதெல்லாம் ஒரு கேள்வியா? என செய்தியாளர்களிடம் ஆவேசமடைந்தார்.