புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்ற மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்ற மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்ற மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தியக் கொடியுடன் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி காவல்துறை சார்பில்  மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. வில்லியனூர் பைபாஸ் சாலையில் இருந்து தொடங்கிய பேரணியை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மூவர்ண்ண கொடியின் கலர் பலூன்களை பறக்கவிட்டனர்.

நிகழ்வில் டிஜிபி மனோஜ் குமார் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன்   கலந்துகொண்டனர் மேலும் வில்லியனூரில் தொடங்கிய பேரணி மங்களம், திருக்காஞ்சி, கரிக்கலாம்பாக்கம், தவளகுப்பம் ஆகிய கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் வரை சென்று 100 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 100 க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.