இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த என்எல்சி ஊழியர் சுரங்கத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை...
நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் ஒருவர் சுரங்கத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி . ன்.எல்.சி சுரங்கம் 1-ல் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த நிலையில், நேற்றிரவு ஒன்பது மணி அளவில் பணி செய்யும் இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சுந்தரமுர்த்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்துபோன சுந்தரமூர்த்தி இன்று 31.05.2021 பணி ஓய்வு பெறும் நாள் இந்தநிலையில் அவர் நேற்று தூக்கு மாட்டி இறந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தரமூர்த்தி பணி செய்யும் இடத்தில் ஏதாவது தொந்தரவு உள்ளதா இல்லை கடன் தொல்லை உள்ளதா இல்லை குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர் நிரந்தர தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழிலாளிகளின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.