குரல கேட்ட உடனேயே சும்மா அதிருதில்ல-சசிகலா ரீஎன்ட்ரி,..அதிர்ச்சியில் ஓபிஎஸ்-இ.பி.எஸ்.! 

குரல கேட்ட உடனேயே சும்மா அதிருதில்ல-சசிகலா ரீஎன்ட்ரி,..அதிர்ச்சியில் ஓபிஎஸ்-இ.பி.எஸ்.! 

சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம் என்ற சசிகலாவின் குரல் வெளிவந்து தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. 

நேற்று சமூகவலைத்தளங்களில் லாரன்ஸ் என்ற அதிமுக தொண்டர் தான் சசிகலாவிடம் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் லாரன்ஸுக்கு சசிகலாவின் பி.ஏ. கார்த்திக்கிடமிருந்து போன் வந்துள்ளது அப்போது போனில் அழைத்த அவர் ,’ ஒரு நிமிசம் இருங்க அம்மா பேசுறாங்க கொடுக்குறேன்' என்று சசிகலாவிடம் போனை கொடுக்கிறார்.

அப்போது சசிகலா  ’லாரன்ஸ் நல்லாருக்கீங்களா?' என்று கேட்க ‘அம்மா நல்லா இருக்குறம்மா, உலகத்துல இத விட பெரிய விசயமே இல்லம்மா, எல்லாரும் நல்லா இருக்கம்மா,உங்க பின்னாடிதாம்மா எல்லாரும் நிக்கிறோம்' என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார். 

அதற்கு ’சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம், ஜாக்கிரதையா இருங்க. நிலைமை வெளிய மோசமா இருக்குப்பா' என்று சசிகலா கூற, 

அதற்கு லாரன்ஸ் ‘ரொம்ப நன்றிம்மா, பொறந்த பொறப்புக்கு இன்னிக்குதாம்மா விடிவு காலம்’ என்றதும், ‘சரிப்பா சரிப்பா.. நிச்சயம் வந்துடுவேம்ப்பா வணக்கம்’ என்று கூறி முடிவுக்கு வருகிறது அந்த போன் கால். 

இந்த போன் கால் வெளியாகி தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் அதிமுக வட்டாரம் கலகலத்துள்ளது.

 இதில் யார் அந்த லாரன்ஸ் என்று விசாரிக்கும் போது அவர் அதிமுக  தொண்டர் என்றும், சசிகலா சிறையில் இருக்கும் போதே பல கடிதங்களை எழுதியுள்ளார் என்றும், இவரது கடிதத்துக்கு சசிகலாவும் பதில் எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.