உங்களிடம் பேசியதற்காக கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை.! சசிகலாவிடம் பொங்கிய தொண்டர்.!  

உங்களிடம் பேசியதற்காக கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை.! சசிகலாவிடம் பொங்கிய தொண்டர்.!  

உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை என சசிகலாவிடம் பேசிய தொண்டரின் ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தனது தொடர் ஆடியோக்களால் அதிமுகவை அதிரவைத்து வருகிறார் சசிகலா. தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தாலும் அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பின் தொடர்ச்சியாக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவை கைப்பற்றும் தனது ஆசையை வெளியிட்டு வருகிறார். 

சமீபகாலமாக கட்சித் தொண்டர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஏற்கனவே சில ஆடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 


அந்த ஆடியோவில் "தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. வன்னியருக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் தென்தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். இதனால் தென் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை, தலைவர், அம்மா காலத்தில் அடிமட்ட தொண்டன்கூட எம்எல்ஏ ஆகலாம் என்று இருந்தது,ஆனால் தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. தற்போது கட்சி தலைமை இல்லாமல் இருப்பதாகவும், தலைமை ஏற்பதற்கு வரவேண்டும் என்று அந்த அதிமுக தொண்டர் கூறியதற்கு, வருவேன் என சசிகலா பதிலளிக்கிறார். 


மேலும்  உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியிலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமென தொண்டர் கூறுகிறார். தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சசிகலா கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.