தந்தை கண் முன்னே உயிரிழந்த மகன்!

நாகை மாவட்டம்  கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனம் மீீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை கண் முன்னே உயிரிழந்த மகன்!

நாகை மாவட்டம்  கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனம் மீீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகரகடம்பனூர், மெயின் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் டைலராக திருவாரூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தனது மகன் யுவன் சங்கருடன் இருசக்கர வாகனத்தில் திருவாரூக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பின்பக்கமாக மோதியது.

இதில் தியாகராஜன், யுவன்சங்கர் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், யுவன்சங்கர்  பலியானார். பலத்த காயமடைந்த தியாகராஜன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.