உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் திடீர் போராட்டம்!

நகராட்சி ஆணையரோ உழவர் சந்தையால் நகராட்சிக்கு எவ்வித வருமானமும் இல்லை என்றும் நகராட்சி அனுமதி அளித்துள்ள பெட்டிகளால் தான் வருமானம் உள்ளது என அவர் கூறியதாக சொல்கிறார்கள்

உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் திடீர் போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் சந்தை

பழனி உழவர் சந்தையில் 850க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து, தினமும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை அருகிலேயே பழனி நகராட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

விவசாயிகள் பாதிப்பு

இந்தப் பெட்டிகளில் வியாபாரிகள் அனைவரும் காய்கறி கடைகள் அமைத்து அதிகவிலைக்கு காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுமக்களும் விவசாயிகள் என நினைத்து உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்தாகவும், இது குறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ஆனால் நகராட்சி ஆணையரோ உழவர் சந்தையால் நகராட்சிக்கு எவ்வித வருமானமும் இல்லை என்றும் நகராட்சி அனுமதி அளித்துள்ள பெட்டிகளால் தான் வருமானம் உள்ளது எனவே நகராட்சி பெட்டிகளை அகற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

 போராட்டத்தில் உழவர் சந்தை விவசாயிகள்

எனவே நகராட்சி சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள பெட்டிகளை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி உழவர் சந்தை விவசாயிகள் இன்று அதிகாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறி தகவல் இருந்து வந்த பழனி நகர போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.