அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க கோரிக்கை!

அங்கன்வாடி ஊழியர்களுக்கு  நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க கோரிக்கை!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பரிமளா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மூன்று வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களை எந்த வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், செல்போன் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்து பழுதடைந்துள்ளதால் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊதிய உயர்வு

ஏற்கனவே மினி மையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 1993 பணிகள் சேர்ந்தவர்களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும் திட்டப்பணி தவிர பிற துறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும். உணவின் செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கம் இட்டனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.