ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து...! தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம்...!

ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து...!  தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம்...!

 
ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் தெரிவித்துள்ளார். 

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலபிள்ளை நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை இன்று திறந்து வைத்து காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர் எஸ் எஸ் பேரணிக்கு  அனுமதி அளிக்கப்பட்டதை அரசியாலாக்க விரும்பவில்லை என்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்களை அதிகம் இயக்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 இதையும் படிக்க:... அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு... ! தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி...!

தொடர்ந்து,  தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காக  நவீன அதிவிரைவு படகுகள் மற்றும் ஹெலிபேடுகள் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும், குமரியில் விமான நிலையம் அமைக்கவும் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவை எல்லாம் விரைவும் கிடைக்கும் என நம்புவதாக 'விஜய் வசந்த் '  தெரிவித்தார்.

மேலும் அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதையும் படிக்க;.. அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் -ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்