பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு ஜுன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

அண்ணாப் பல்கலைகழக பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு ஜுன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்முடி, பொறியியல் மாணவர்களுக்கான மறுத்தேர்வு குறித்து அட்டவனையை வெளியிட்டார். அண்ணா பல்கலை யூ.ஜி., பி.ஜி பட்டப்படிப்பு தேர்வுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கும் என்றார். மற்ற ரெகுலேஷன் மாணவர்கள் தேர்வு ஜூன் 21ஆம் தொடங்கும் என்றும் ஜூலை 30ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைவதாகவும் பொன்முடி தெரிவித்தார். ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்ட தேவை இல்லை என கூறிய அமைச்சர் பொன்முடி, பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் ஜுன் 3 தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.மேலும் மற்ற பல்கலைக்கழங்கலில் ஜூன்15 தேர்வு தொடங்கும் என அமைச்சர் கூறினார்.

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு ஜுன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…