பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க... கையில் போர்டுடன் வானதி ஸ்ரீனிவாசன்!!

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு  விடியல் தாங்க  முதல்வரே பாஜக எம்.எல்.ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாங்க... கையில் போர்டுடன் வானதி ஸ்ரீனிவாசன்!!

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழகம் முழுவதும், பா. ஜ.க. சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க.  நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரமாக மதுக் கடைகளை மூட வலியுறுத்தியும்,  கோஷங்கள் எழுப்பினர். 

கடந்த ஆண்டு மதுக்கடை திறந்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கலந்துகொண்ட கனிமொழியின் புகைப்படடித்த்தை போட்டு "இப்போது அண்ணனிடம் (ஸ்டாலின்) என்ன , எப்படி கேட்பீர்கள்??" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல" ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில்..இறப்பு நூற்றுக்கணக்கில் ...டாஸ்மாக் திறப்பு அவசியமா ?? ஒரு வருடத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட வேஷம் மாறியதோ?? ஒலித்த கோஷம் மறந்ததோ?? இதுதான் விடியலா?? எனவும் கேள்வியெழுப்பி ட்வீட் போட்டிருந்தார்.

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு #விடியல் தாங்க முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள்  #குடியைக்கெடுக்கும்திமுக என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.