வேறொருவரை திருமணம் செய்த மனைவி..மகளையும் பார்க்கவிடாமல் தடுப்பு..சோகத்தில் தற்கொலை செய்த இளைஞர்..! 

வேறொருவரை திருமணம் செய்த மனைவி..மகளையும் பார்க்கவிடாமல் தடுப்பு..சோகத்தில் தற்கொலை செய்த இளைஞர்..! 

பெற்ற மகளை பார்க்க முடியாத ஏக்கத்திலும், பிரிந்து சென்ற மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதை அறிந்த நிலையிலும் நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் வாகையடி பகுதி குலாலர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் வித்தியா என்ற பெண்ணுடன் திருமணம்  நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். இதனிடையே திடீரென்று கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு மனைவி தனது பெண் குழந்தையை தூக்கி கொண்டு இரணியலில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் இருவரும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று தன் குழந்தையை பார்ப்பதற்காக மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார் . ஆனால் அங்கு மகளை பார்க்க விடாமல் மனைவி வித்தியா தடுத்ததோடு ராதாகிருஷ்ணனை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அப்போது தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி மற்றொரு குழந்தையும் இருப்பதை அறிந்த ராதாகிருஷ்ணன், தான் பெற்ற மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் நாகர்கோவிலில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தனது செல்போனை உடைத்து எரிந்து விட்டு மனமுடைந்த நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இராதாகிருஷ்ணனின் அம்மா அவரது வீட்டிற்கு அருகில் அண்ணனுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் தனது மகனை பார்க்க வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்ததை அறிந்த தாயார் மகன் இராதாகிருஷ்ணனை அழைத்துள்ளார் ஆனால் சத்தம் ஏதும் இல்லாததால் சந்தேகம் அடைந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்து பின்பக்கமாக சென்று கதவை உடைந்து பார்த்த நிலையில் இராதகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

பின்னர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.