இதெல்லாம் எனக்கு அசால்ட்டு மேட்டரு... இளைஞரின் செயலால் உறைந்து போன பொதுமக்கள்!!

ஒசூர் மாநகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த விஷப் பாம்புகளை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

இதெல்லாம் எனக்கு அசால்ட்டு மேட்டரு...  இளைஞரின் செயலால் உறைந்து போன பொதுமக்கள்!!

ஒசூர் மாநகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த விஷப் பாம்புகளை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் பத்தளப்பள்ளி, அந்திவாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் விஷப்பாம்புகள் நுழைந்துள்ளன.  இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள்,ஒசூரை சேர்ந்த பிரபல பாம்புபிடி வீரரான டேவிட் மாறன் என்பவருக்கு தகவல் அளித்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வீரர் மூன்று பாம்புகளை லாவகமாக பிடித்து அடர் வனபகுதியில் உயிருடன் விட்டார்..