பாம்பிற்கு ராக்கி கட்டி மகிழ்ச்சி: வளர்த்தவரை கடித்துக் கொன்ற பாம்பு ! வீடியோ வைரல்!!
பீகாரில், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, இளைஞர் ஒருவர் நல்ல பாம்புகளுக்கு ராக்கி கட்டியவர், பாம்பு கடித்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பீகாரில், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, இளைஞர் ஒருவர் நல்ல பாம்புகளுக்கு ராக்கி கட்டியவர், பாம்பு கடித்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பீகாரை சேர்ந்த பாம்பாட்டியான மன்மோகன் சிங், ரக்ஷாபந்தன் அன்று, தனது பாம்புகளுக்கு ராக்கி கயிறுகளை கட்ட முயன்றுள்ளார். இதற்கென இரு நாகப்பாம்புகளின் வால்களை கையால் பிடித்திருந்த அவர் மற்றொரு கையால் அவற்றில் ஒன்றின் நெற்றியில் திலக மிட்டு கொண்டிருந்ததார். அப்போது தரையில் ஊர்ந்தபடி இருந்த பாம்பு ஒன்று, திடீரென மன்மோகனின் கால் அருகே சென்று, அவரது கால் விரலில் தீண்டியுள்ளது. இதனால் வலியில் துடித்த அவரை அங்கிருந்த மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் உடல் முழுவதும் விஷம் பரவியதன் காரணமாக மன்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
https://twitter.com/TusharSrilive/status/1429644985029124099