ஒரே ஒரு தண்ணி பாட்டிலால் வந்த வினை.... கோகோலாவிற்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரே ஒரு செயலால், கோகோ-கோலா குளிர்பான நிறுவனத்திற்கு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரே ஒரு தண்ணி பாட்டிலால் வந்த வினை.... கோகோலாவிற்கு ரூ.29 ஆயிரம் கோடி நஷ்டம்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரே ஒரு செயலால், கோகோ-கோலா குளிர்பான நிறுவனத்திற்கு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, செய்தியாளர் சந்திப்பின் போது, மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ-கோலா பாட்டில்களை தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் காட்டினார். அந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில் கோகோ-கோலா நிறுவனத்தின் பங்கு சுமார் 29 ஆயிரத்து 377 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து உள்ளது.