சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி.. வைரலாகும் வீடியோ!!

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி.. வைரலாகும் வீடியோ!!

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் இரண்டு குட்டியுடன் சாலையில் பெரிய கரடி ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சாலைகளில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.