ஓடையில் தனது குட்டியுடன் தாகம் தீர்த்த யானைகள் - பக்தர்கள் செல்பி, வீடியோ எடுத்து மகிழ்ச்சி !

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதி ஓடை ஒன்றில் தண்ணீர் குடித்த யானைகளை அவ்வழியே சென்ற பக்தர்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஓடையில் தனது குட்டியுடன் தாகம் தீர்த்த யானைகள் - பக்தர்கள் செல்பி, வீடியோ எடுத்து மகிழ்ச்சி !

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தைப்புலி போன்ற பலவகை வனவிலங்குகள் உள்ளன.

இந்தநிலையில், கோடைக்காலத்தையொட்டி, வனப்பகுதியில் தனது குட்டியுடன் தண்ணீரை தேடி வந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள ஓடையில் ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரை குடித்து தனது தாகத்தை தீர்த்தது.

இந்த காட்சியை பண்ணாரி கோயிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.