மகனின் முன்னாள் காதலியைக் கரம்பிடித்த 51 வயது தந்தை; 24 வயது வித்தியாசத்தில் காதலுக்கு வயதில்லை என கூறும் காதல் ஜோடி
51 வயதானவர், 24 வயது குறைவான, தனது மகனின் முன்னாள் காதலியை திருமணம் செய்திருக்கிறார். மேலும், அவர் அந்த பெண்ணை 11 வயது குழந்தையாக சந்தித்ததாகவும், அந்த பெண் 6 - வது வகுப்புபடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்ததால், இந்த திருமணம் பேசு பொருளாகியுள்ளது.
51 வயதானவர், 24 வயது குறைவான, தனது மகனின் முன்னாள் காதலியை திருமணம் செய்திருக்கிறார். மேலும், அவர் அந்த பெண்ணை 11 வயது குழந்தையாக சந்தித்ததாகவும், அந்த பெண் 6 - வது வகுப்புபடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்ததால், இந்த திருமணம் பேசு பொருளாகியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 27 வயதான சிட்னி டீன் என்பவர், 51 வயதான டிரக் டிரைவர் பாலை சந்தித்திருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, தனது தற்போதைய கணவரான பாலின் மகனைப் பார்க்கச் சென்ற நிலையில், இருவரும் 2016 இல் திருமணம் செய்துகொண்டனர்.
தனது இளம் வயது காதலரான பாலின் மகனுடன் பிரிந்த பிறகும், இருவரும் நல்ல நண்பர்களாக் ஐருந்து வந்திருக்கின்றனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு காதலி பெற்றதால், இருவருக்கும் இடையிலான நெருக்கம் குறைந்து, சிட்னி தனித்து விடப்பட்டிருக்கிறார். அவரது தனிமை காலங்களில் கிண்டல்களும் கேலிகளும் செய்து, சிட்னியின் மனதிற்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார் பால்.
இது தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தன்னை விட 27 வயது சிறியவரான சிட்னிக்கு, 16 வயதான உடன், திருமணம் செய்து கொண்டார் பால். 2016-இல் ஒஹியோவில் சட்டப்பூர்வ திருமண வயது பெண்களுக்கு 16 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இடு குறித்து சிட்னி பேசும் போது, "பாலைக் காதலிப்பேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, நாங்கள் எந்த எண்ணமும் இல்லாமல், சாதாரணமான முறையில் தான் சந்தித்தோம். ஆனால் இப்போது நான் அந்த் அதருணங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்று கூறினார்.
பின், தங்களது குடும்பங்களின் ஒப்புதல் குறித்து பேசும் போது, சிட்னியின் தாய்க்கு முதலில், இவர்களது வயது வித்தியாசமும், பாலின் உறவு முறையும் தெரிய வந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பின் ஒரு வருடத்திற்கு பிறகு தான் இவர்களது உறவுக்கே ஒப்புதல் கொடுத்துள்ளார். தற்போது அனைவரும் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
51 வயதான பாலிற்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்தவர் தான் சிட்னியின் முன்னாள் காதலர், மற்றும், அவரது சகோதரர் இளையவராக இருக்க, இருவரது காதலை அவர் ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக் கொண்டு அனைவரும் ஒன்றாக இருப்பதாகவும் இந்த வித்தியசமான காதல் ஜோடி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு பெரிய ட்ரக் விபத்தில் சிக்கிக் கொண்ட பால், SICU இல் இருந்ததாகவும், அவரது நலன் குறித்து குடும்பம் கவலையில் இருந்த போது, சிட்னிக்கு குடும்பத்தார் ஆதரவளித்ததாகவும் கூறினார் சிட்னி.
இவர்களது இந்த வித்தியாசமான காதலை இன்று வரை ஏற்காத சிட்னியின் நண்பர், அவர்களது நட்பை முறித்துக் கொண்டதாகவும் தெரிவித்த சிட்னி, தான் தற்போது பாலுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஜூன் மாதம் ப்ரைட் அதாவது, LGBTQIA+ சமூகத்தினரை அங்கிகரிக்கும் மாதமாக இருக்க, இவர்களது காதல் கதை சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.