என் சாவுக்கு பக்கத்து வீட்டுகாரர் தான் காரணம்

சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய இறப்பிற்கு அருகில் குடியிருப்பவரே காரணம் என கூறி கடிதம் எழுதி வைத்து அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயற்சி

என் சாவுக்கு பக்கத்து வீட்டுகாரர் தான் காரணம்

காரைக்குடி அருகேவுள்ள பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி கண்மணி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் நெப்போலியன் என்பவர் தன்னை தாக்கியதாகவும் அது குறித்து அருகில் உள்ள குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என் கூறப்படும் நிலையில் இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு அது குறித்து மனு அளிக்கவந்த கண்மனி கையில் அரளி விதைகளுடன் வந்ததுடன் தன்னுடைய இறப்பிற்கு காரணம் நெப்போலியந்தான் என கடித மனு வை கையில் வைத்து கொண்டு அரளி விதையை சாப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | யார் சார் சாதி பாக்குறாங்க - விசிக ஆர்ப்பாட்டம்

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக அவரை மீட்ட காவலர்கள் கண்மனியை 108 ஆம்புலண்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இளம் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது