பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போல... 2 கார்களின் மீது ஏறி ஸ்டெண்ட் செய்த இளைஞர்...அலேக்காக தூக்கி உள்ளே வைத்த போலீசார்!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போல... 2 கார்களின் மீது ஏறி ஸ்டெண்ட் செய்த இளைஞர்...அலேக்காக தூக்கி உள்ளே வைத்த போலீசார்!

இந்தி படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் செய்வது போன்ற ஸ்டண்ட் காட்சியை, சாலையில் செய்து வீடியோ பதிவு செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

Phool Aur Kaante என்னும் இந்தி படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், இரண்டு கார்களின் மீது நின்றபடி பயணம் செய்வார். இதேபோன்று, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், சாலையில் சாகசம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, ஆபத்தான சாகசத்தை செய்து வீடியோ பதிவு செய்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாகசத்துக்கு பயன்படுத்திய 2 உயர் ரக கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.