காஷ்மீர் பண்டிட்டுகளின் இனப்படுகொலை குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பதற்கு காரணம்? - ராகுல்காந்தி !

காஷ்மீர் பண்டிட்டுகளின் இனப்படுகொலை குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பதற்கு காரணம்?  - ராகுல்காந்தி !

காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்துப் பேசும் பிரதமர் மோடி காஷ்மீர் பண்டிட்டுகளின் இனப்படுகொலை குறித்து பேச மறுப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சதூராவில் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வந்த ராகுல்பட் என்பவரை அலுவலகத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் ராகுல் பட்டின் மனைவி கதறும் வீடியோவை தமது  டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல்காந்தி, பாதுகாப்பிற்கு பொறுப்பேற்று காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பாஜகவின் கொள்கைகளால் இன்று காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சம் தொட்டுள்ளது எனவும் அவர் சாடினார்.