விரைவாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோஸ்..!!!

விரைவாக செயல்பட்டு  உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோஸ்..!!!

ரயில் நிலையத்தில் பெண் மற்றும் அவரது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர்கள்.

மும்பை மன்குர்த் ரயில் நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சரியான நேரத்தில் ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றினர். ரயில் மன்குர்த் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ​​​​அதிக கூட்ட நெரிசலாக இருந்தது.  ரயிலில் ஏறும் போது பயணிகளின் தள்ளுமுள்ளு காரணமாக, அந்த பெண்ணும் அவரது குழந்தையும் ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து விழுந்தனர்.

ஆனால் இரண்டு ஆர்பிஎப் வீரர்கள் விரைவாக செயல்பட்டதால் அந்த பெண்ணும் அவரது குழந்தையும் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இருவரும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததையும், ராணுவ வீரர்களிடம் சுறுசுறுப்பு காட்டி முதலில் குழந்தையை காப்பாற்றி பின்னர் பெண்ணையும் காப்பாற்றியதை வீடியோவில் தெளிவாக காணலாம்.

அதே சமயம், பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆர்பிஎப் வீரர்கள் விழிப்புடன் செயல்படாமல் இருந்திருந்தால் உயிரிழப்பௌ ஏற்பட்டிருக்கும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஒட்டு கேட்பு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் மீது அமலாக்கத் துறை எதிர்மனு..!!!