இரு குழுக்களாக பிரிந்து நடுரோட்டில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள்:வைரல் வீடியோ..

ஆவடியில் மாணவிகள் ஒருவரை ஒருவர் குழுக்களாக தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இரு குழுக்களாக பிரிந்து நடுரோட்டில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள்:வைரல் வீடியோ..

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வருவதை காண முடிகிறது. சமீபத்தில் ஆபத்தை உணராமல் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஏறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் காத்திருந்த மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டையிட்டுக் கொள்ளும் மாணவிகள் பொதுமக்கள் சமாதானம் செய்ய முயன்றாலும் நிறுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பள்ளியில் எந்த மாதிரியான கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.