அரசு பேருந்தில் பயணித்த இளைஞரை, நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

பொன்னேரியில் இருந்து செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணித்த இளைஞரை, நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு பேருந்தில் பயணித்த இளைஞரை, நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அரி, செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தார். படியில் நின்றுகொண்டு இருந்த இளைஞரை நடத்துனர் பேருந்திற்கு உள்ளே வரசொன்னதாக தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இளைஞர் நடத்துனரை முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் தேவன் தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே, இளைஞரை தாக்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.