டிப்பர் லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவன்

வேலூர் அருகே டிப்பர் லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவனின் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றை ஏற்படுத்தியுள்ளது.

டிப்பர் லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவன்

வேலூர் அருகே டிப்பர் லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவனின் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் நெடுஞ்சாலையில் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அவனது சகோதரியுடன் நின்று கொண்டிருந்தான். அப்போது சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது, எதிர்பாராதவிதமாக ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி வேகமாக மோதியது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அலறியடித்தபடி சிறுவனை காப்பாற்ற ஓடினர். ஆனால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கிய சிறுவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தான். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.