ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்!!.. தென்னாப்பிரிக்க பெண்ணின் சாதனை!..

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்!!..  தென்னாப்பிரிக்க பெண்ணின் சாதனை!..

ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த 7-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், சேய்களும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார்.