இலங்கையில் 40 பெட்ரோல் நிலையங்கள் மூடல்.. எரிபொருள் வினியோகத்தில் கடும் சிக்கல்!

இலங்கையில் 40 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் 40 பெட்ரோல் நிலையங்கள் மூடல்.. எரிபொருள் வினியோகத்தில் கடும் சிக்கல்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அந்நியச் செலாவணியை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது.

இந்திய மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் பெட்ரோலியப் பொருட்களை இலங்கை வாங்கி வருகிறது.

இருந்த போதும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.