ஆப்கானிஸ்தானில் மசூதி உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் மசூதி உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் - 14 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக காபூல் அருகேவுள்ள  மசார்-இ-ஷெரீப் என்ற நகரில் மினி பேருந்துகள் மீது குண்டு வீசப்பட்டதில், அதில் பயணித்த பயணிகள் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 15 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்த குண்டு வீச்சுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.