இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் பலி!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் பலி!

இஸ்ரேல் ராணுவம்- பாலஸ்தீனியர்களிடைய நடைபெற்ற மோதலில் அல் ஜசீரா செய்தித் தொலைக்காட்சி பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் நடைபெற்றும் வரும் மோதல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் சுட்டது தொடர்பாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

பத்திரிகையாளர்கள் என்று ராணுவத்திடமும், பொதுமக்களிடமும் எடுத்துச் சொல்லி சம்பவ இடமான ஜெனின் என்ற இடத்தை நோக்கிச் சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறும் சக பத்திரிகையாளர்கள், உயிரிழந்த ஷிரீனின் உடலை எடுக்கச் சென்றவர்கள் மீதும் தொடர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.