2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு...

2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு...

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஏற்கனவே இயற்பியல், வேதியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளரான டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.