பெய்ஜிங்: நாளை முதல் அரண்மனை அருங்காட்சியகமும் மூடல்!

பெய்ஜிங்கில் உள்ள அரண்மனை அருங்காட்சியகம் நாளை முதல் மூடுப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

பெய்ஜிங்: நாளை முதல் அரண்மனை அருங்காட்சியகமும் மூடல்!

கடந்த 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதையடுத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

40-க்கும் மேற்பட்ட சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கல்வி நிலையங்கள், உணவகங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் அரண்மனை அருங்காட்சியகமும் நாளை முதல் மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடைப்பிடித்தாலும் சீனாவில்   கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.