சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் இன்றளவும் பாதிப்பட்டு வரும் நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 35 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,462 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.