சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்... சரிசெய்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு...

பாகிஸ்தானில் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. 

சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்... சரிசெய்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு...

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கடந்த 4-ஆம் தேதி மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டதுடன் கோவிலின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டது.

இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்து கோவில் இடிப்புக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டதுடன் கோவிலை புனரமைத்து கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் மீது பயங்கரவாதம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்ட கோவில் புனரமைக்கப்பட்டு இந்து சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.