அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு..!

அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு..!

அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்கு காய்ச்சல் குரங்குகள் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்தே அமெரிக்கா இன்னுன் முழுமையாக மீளாத நிலையில் தற்போது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கனடாவுக்கு சென்று வந்த நிலையில் குரங்கு காய்ச்சலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலர் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவியது என்பது குறிப்பிடதக்கது.