அவசரநிலை சட்டம் ரத்து : லாரி ஓட்டுனர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கனடா பிரதமர் அறிவிப்பு

லாரி ஓட்டினர்களின் போராட்டத்தை தொடர்ந்து, கனடாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அவசரநிலை சட்டம் ரத்து : லாரி ஓட்டுனர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கனடா பிரதமர் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியது. அங்கு பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லாரி ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதுடன், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி  ஓட்டுனர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

லாரி ஓட்டுனர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில், லாரி ஓட்டுனர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.