நீர் யானைக்கு லாவகமாக கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்!!

சீனாவில், நீர் யானை ஒன்றிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீர் யானைக்கு லாவகமாக கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்!!

சீனாவில் அதிவேக கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் ஜி ஜின்பிங் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. வாரந்தோறும் ஒவ்வொரு நகர மக்களுக்கும் வீடு வீடாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விலங்குகள் மூலம் கொரோனா பரவிவிடக்கூடாது என்பதற்காக வனவிலங்குகளுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்கள், விலங்குகளுக்கு பிடித்தமானதை காண்பித்து அதன் கவனத்தை திசைதிருப்பி பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.