பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் 50 பேர் கொண்ட இஸ்லாமிய கும்பலால் அடித்து நொருக்கி சூறையாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.