தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு இடைக்கால அரசு நிறுவப்படும்: தலிபான் அறிவிப்பு  

தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு நிறுவப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  

தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு இடைக்கால அரசு நிறுவப்படும்: தலிபான் அறிவிப்பு   

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு விரைவில் அமையவுள்ளது. சரியான தேதியை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், மிக விரைவில் அமையும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 தற்போதைய செயல்முறையின் சில தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். துறைகளில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்த்தபின்னரே இடைக்கால அரசு அமையும் என்று தெரிவித்தார்.அதுபோல, தலிபான் அனாமுல்லா சமங்கனி ,நாங்கள் முற்றிலும் சுதந்திரமான ஆப்கானிஸ்தானில் வாழ்கிறோம். புதிய அரசுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.