மெக்சிகோ: ஹெலிகாப்டர் விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலி!!

மெக்சிகோ: ஹெலிகாப்டர் விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலி!!

மெக்சிகோ நாட்டில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு மெக்சிகோ பகுதியியில் கைது செயயப்பட்ட போதைப் பொருள் கடத்தல் தாதா ரஃபேல் கேரோ கொயின்டரோ என்பவரை சினோலா நகரில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு சென்ற  போது பாதுகாப்புக்காக மற்றொரு ஹெலிகாப்டரில் வீரர்கள் சென்றனர்.

அப்போது வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மடடும் இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.