அதிகரித்து வரும் கொரோனா: மீண்டும் முதலில் இருந்தா? கலங்கும் மக்கள்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதிகரித்து வரும் கொரோனா: மீண்டும் முதலில் இருந்தா? கலங்கும் மக்கள்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்தில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது. இந்தப் புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே இங்கிலாந்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 21-1ந்  தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர பிரிட்டன் அரசு திட்டமிட்டிருந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது‌. எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.  

வரும் ஜூலை 19 ஆம் தேதிக்குப் பிறகே ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், ஊரடங்கை மேற்கொண்டு நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.