ஒரே வாரத்தில் 70 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரான்...

ஐரோப்பாவில் 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் 70 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரான்...

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது தொடர்ந்து உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஜனவரியான இந்த மாத முதல் வாரத்தில் இந்த வைரஸானது 70 லட்சம் பேருக்கு ஐரோப்பாவில் பாதித்தது.இரண்டு வாரங்களாக 2 மடங்காக இந்த பரவல் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பினர்  “ இந்த பிராந்தியத்தில் உள்ள 26 நாடுகளில் அவற்றின் மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடுகளின் சுகாதார அமைப்புகள் நிரம்பி வழியும் வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இதற்கு முன் நாம் கண்ட உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஒமைக்ரான் மிகவேகமாகவும், பரவலாகவும் நகர்கிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள்ளும் முககவசம் அணிவதை நாடுகள் கட்டாயம் ஆக்க வேண்டும். தடுப்பூசிகள் போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.