அதிபருக்கு எதிரான போராட்டம்.. பரபரப்பில் இலங்கை ‘வவுனியா’...

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அதிபருக்கு எதிரான போராட்டம்.. பரபரப்பில் இலங்கை ‘வவுனியா’...

இலங்கை : வவுனியா மாவட்ட செயலகத்துக்கு இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், பொலிசாருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் நமது மாலைமுரசு செய்தியாளர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பல சர்ச்சைகளுக்குப் பின் முதல் முறை பொது நிகழ்வில் கலந்து கொண்ட ராஜபக்சே...

வவுனியாவுக்கு வருகை தரும் ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. 

மேலும், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்படவுள்ளது. இதனையொட்டி, சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிசார் உள்ளிட்டோர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். திடீரென போராட்டம் மூண்டதால் அப்பகுஹியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கிறாரா ரணில்...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!